அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியாது

கொழும்பு, மே 28

விவசாயத்துக்கு முன்னுரிமையளித்து, அதற்காக அதிக நிதியை ஒதுக்கி, பாரிய விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர்த்து, எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.  எனினும், கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயண உரம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்துடன், நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *