எரிபொருள், எரிவாயு தட்டுப்பாட்டால் இடம்பெறும் மனித உரிமை மீறல்; அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழுத்தம்!

நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் விளைவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், எரிசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நிற்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளை ஆராயுமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பிரச்னைகளை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை வகுக்கவேண்டும். அத்துடன் அவசரமான தேவை என்பதை கருதி பிரச்சினைக்கு தீர்வுகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்

  1. உதிரி பாகங்களின் விலை சடுதியாக உயர்வு; – மீண்டும் உயரும் பேருந்து கட்டணம்!
  2. விமானங்களுக்கான எரிபொருள் கடும் பற்றாக்குறை; அமைச்சர் விசேட கவனம்!
  3. கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதல்வரின் கருத்து சாத்தியமற்றது! கடற்றொழில் அமைச்சர்
  4. சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
  5. 2 வருடங்களின் பின் பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஜப்பான்
  6. நாட்டில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *