பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் !

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தென்மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் மறைமுக அங்கீகாரத்துடன் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *