21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் – மஹிந்த அமரவீர

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆகவே மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து சகல கட்சிகளும் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பெற்றமை சுதந்திர கட்சிக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டிருக்கும் போது கட்சி மட்டத்தில் இருந்துக்கொண்டு அரசியல் செய்வது சிறந்ததாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்பதற்காக, சம்பளம் பெறாமல் பதவியினை வகிக்க ஏற்றுக்கொண்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *