மூன்றாம் மாடி கட்டடத்திலிருந்து வீழ்ந்து வெளிநாட்டவர் தலை சிதறி உயிரிழப்பு! – வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் ஒருவர் காணப்பட்ட நிலையில், உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில்,

குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

  1. யாழில் சினைப்பசுவை இறைச்சியாக்கிய கொடுமை – கண்டுகொள்ளாத பொலிஸார்!
  2. நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவில் ஏற்படவுள்ள மாற்றம்
  3. கட்டுமானத்துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!
  4. எழுதுமட்டுவாழில் கைக்குண்டு மீட்பு!
  5. 240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் வசமாக சிக்கினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *