மற்றுமொரு டீசல் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றது !

டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (29) நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வந்துள்ள கச்சா எண்ணெய்யை கப்பலில் இருந்து இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்;

17,077 மெட்ரிக் தொன் டீசல், 1,072 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல், 92 பெட்ரோல் – 37,391 மெட்ரிக் தொன், 95 பெட்ரோல் – 6,142 மெட்ரிக் தொன், JET A1 எரிபொருள் – 2,437 மெட்ரிக் தொன் இருப்பதாக கூறினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் தொடரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *