மத்திய மலைநாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

மத்திய மலைநாட்டில் மத்திய மாகாணத்தில் தொடர் மழை காரணமாக அதிக வேகத்தில் பரவும் அபாயநிலை தொன்றியுள்ளது என மத்திய மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீட்டு பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதை முற்றாக இல்லாமல் செய்யும் வேண்டும் எனவும்.அதே போல் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதை உடனே அகற்றல் அவசியம் என மக்கள் இது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர் மழை காரணமாக டெங்கு அபாயம் உள்ளது.இதனால் எதிர் வரும் தினங்களில் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் மக்கள் குடியிருப்புகள் பகுதிகளில் நேரடியாக சென்று டெங்கு பரவாமல் இருக்க விழிர்ப்புனர்வு செய்ய உள்ளனர்.

மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் நீர் தேங்கா வன்னம் பார்த்து கொல்வது அவசியம் என கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *