விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் கொட்டடி நாவாந்துறைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர்
காயமடைந்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதான
நவரட்ணராஜா சங்கித் என்பவர் உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்தவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேகமாக மோட்டார் வாகனத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணமென தெரியவரும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *