யாழில் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணை வழங்கி வைப்பு

யாழ், மே 28

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, யாழ் இந்திய துணை தூதரகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு,நெடுந்தீவு ஆகிய தீவுகளில் மண்ணெண்ணை தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு, மண்ணெண்ணையை வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை நண்பகல் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நான்கு தீவு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 705 கடற்றொழிலாளர்களில், 146 ஊர் காவற்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 20 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும், 15000லீற்றர் முதற்கட்டமாக யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக நாளை மயிலிட்டி மற்றும் மாதகல் பகுதிகளுக்கு வழங்கி வைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் சம்மேளன தலைவர் அன்னராசா, அதன் உப தலைவர் வர்ணகுலசிங்கம், யாழ் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், நெடுந்தீவு, வேலனை பிரதேச செயலர், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  கடற் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *