அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாள நிலையில் கடந்த ஏப்ரல் 09ம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி போராட்டம் இன்று 50வது நாளை எட்டியது.
இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் கிரிகெட் வீரர் சனத் ஜயசூரிய தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
கோகோடா காமா மற்றும் நாட்டிலும் போராட்டக்காரர்களுக்கு 50 நீண்ட மற்றும் கடினமான நாட்கள். அரசியல்வாதிகளுக்கு நாங்கள் விரும்பும் மாற்றத்தை வழங்க இன்னும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம். காடு இருளாகவும் ஆழமாகவும் இருக்கிறது என்று மக்களுக்கு நான் சொல்கிறேன், ஆனால் நாங்கள் தூங்குவதற்கு முன் மைல்கள் செல்ல வேண்டும் என்று உறுதிமொழிகள் உள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளார்.
