பண்டாரகமவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் சடலம் சனிக்கிழமை (28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு குறித்த பகுதிக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்றைய(27) தினம் காலை கடைக்கு சென்று திரும்பும் வழியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று பிற்பகல் சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *