
பண்மாரகம,மே 28
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போனதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே இவ்வாறு குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.