யாழில் சுற்று வட்டத்தினை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

தூயநகரம் அழகிய மாநகரம் என்ற தொனிப்பொருளில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் முன்னெடுக்கப்படும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சுற்றுவட்டங்களை அழகுபடுத்தும் செயற்பாட்டின் நீட்சியாக யாழில் இன்றைய தினம் திருவள்ளுவரின் சிலைக்கான சுற்றுவட்டம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றிருந்து.

யாழ்ப்பாணத்தினை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக ”தூய நகரம் ”என்ற திட்டத்தின் கீழ் குறித்த சுற்றுவட்டத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ” ரில்கோ ” நிறுவனத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண பிரதான தபால் நிலையத்தின் முன்பாக திருவள்ளுவரின் சிலையின் சுற்றுவட்டம் ” அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ” என்ற மகுட வாசகத்துடன் வெகு விரைவில் அமைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *