அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம்

அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கட்டடங்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக அமைச்சரவை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *