கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி- பாரதிபுரம், சூசைபிள்ளை கடை சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள், ‘பள்ளி செல்ல வேண்டிய ஒரு பாலகியை உன் வீட்டில் வேலைக்கு வைத்துவிட்டு நல்லாட்சி செய்தாயோ?’, ‘அரசே சிறுமியின் சாவுக்கு தீர்வு எங்கே?’, ‘யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்’, ‘பெண் அடிமையின் உச்சம் ஒரு பாலகியின் மரணம்’ உள்ளிட்ட கோசங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பாரதிபுரம்,  மலையாளபுரம்,  கிருஸ்ணபுரம் ஆகய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த  குறித்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *