அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம்

<!–

அட்டாலுகம சிறுமி மரணம் – சிஐடி விசாரணை ஆரம்பம் – Athavan News

அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று ( சனிக்கிழமை ) பண்டாரகம, அதுலுகமவில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை அட்டாலுகம பிரதேசத்தில் சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளமை குறிப்பிடதக்கது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *