மன்னார் – பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வெரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்கு கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னரே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.
மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில், செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமூர்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன், பொலிஸரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- யாழில் எரிவாயு விநியோகிக்கப்படும் முறை – வெளியானது அறிவிப்பு
- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த, நாமலுக்கு அழைப்பு
- நாட்டில் வருட இறுதியில் அரிசி இல்லை! – பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
- கடன்களைப் பெறுவதற்கான வல்லமை மட்டுமே ரணிலுக்கு உள்ளது! – சுரேஷ் பிரேமச்சந்திரன்
- அட்டுலுகம சிறுமி மரணம்; விசாரணைகள் CIDயிடம்!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்