யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய்

யாழ்ப்பாணம்,மே 29

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோரின் தலைமையில் இந்த விநியோக நிகழ்ச்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மீனவர்கள், ஊர்காவற்றுறை மீனவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் நயினாதீவு மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *