நைஜீரியாவில் தேவாலய நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு

தெற்கு நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் தேவாலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர “ஷாப் ஃபார் ஃப்ரீ” நேற்று சனிக்கிழமை அதிகாலை இடமபெற்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *