உணவுகளை வீணடிப்பதை முடியுமான அளவு குறைக்க வேண்டும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாடுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையும்.
உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளமையை சந்தேகத்திற்கு இடமின்றி கூறக் கூடிய நிலை உருவாகியுள்ளது. அதற்காக அச்சமடைந்து பதற்றமடைவதற்காக இந்த தகவல் வெளியிடப்படவில்லை.
தற்போது முதல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதன் ஒரு படியாக முடியுமான அளவு உணவு பொருட்களை வீணடிப்பதை குறைக்க வேண்டும். தேவையான அளவு உணவை மாத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனூடாக உணவு வீணடைவதை தவிர்க்க முடியும்.
அத்துடன் உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தொகையை கட்டுப்படுத்த முடியும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்