நுவரெலியா மாவட்டத்திற்கு இந்திய நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்திய தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் நேற்று மாலை நானுஓயா புகையிரத நிலையத்திற்கு வந்தடைந்தது.

இந்தியா தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் பகிர்ந்து அளிக்கப்படும் திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பெருந் தோட்ட மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர் மட்ட உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1750 மெற்றிக் டன் அரிசி, 21 பால் மா பவுடர் இந்திய தமிழக அரசின் மூலம் இம் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவு உள்ள மக்களுக்கு அரிசி 10 கிலோ வழங்கபட உள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 60314 குடும்பங்களும், கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் 34012 குடும்பங்களுக்கும், வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் 36502 குடும்பங்களுக்கும், ஹங்குராங்கெத பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 32305 குடும்பங்களுக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 8150 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளது.

மேலும் இந்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வறிய குடும்பத்தை சார்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தலா ஒரு கிலோ பால் மா பவுடர் வழங்கபட உள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *