யாழில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி- தாளையடி பகுதியில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்த வேளையில் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மஞ்சளை ஏற்றிக்கொண்டு இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது,  372 கிலோ மஞ்சள் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *