பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்-நாமல் கோரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தினந்தோறும் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு அற்ற விலைகள் காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலை தொடர்கிறது.

இந்நிலையில் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

புதிய இலங்கைக்கு க்கு ஏற்ற புதிய அரசியல் கலாச்சாரம் மிகவும் அவசியமானது மற்றும் அத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை நாம் ஆதரிக்க வேண்டும். இப்போது எங்களின் முன்னுரிமை பொருளாதாரத்தை தீர்ப்பதுதான்.

நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்தல். பொது மக்கள் மீதான சுமையை குறைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பின்னர் ஒரு அரசியல் தீர்வை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *