நாட்டில் கடந்த சில மாதங்களாக நீர்நிலைகளில் நீராடச் சென்று உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை புளியடித்துறை ஆற்றில் நண்பர்களோடு சேர்ந்து நீராடிய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.
நீரில் மூழ்கிய மாணவனை தேடி கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடுதல் நடத்தியதுடன் சற்றுமுன் குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் எம்.எச்.அர்ஹம் என்ற மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



