ஆற்றில் மூழ்கிய ஓட்டமாவடி மீராவோடை பாடசாலை மாணவனின் உடல் மீட்பு

ஓட்டமாவடி,மே 29

16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை புளியடித்துறை ஆற்றிலேயே இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை (29) இடம்பெற்றுள்ளது.

மீராவோடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் எம்.எச்.அர்ஹம் எனும் மாணவன் நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனை கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடி மீட்டெடுத்தனர்.மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *