யாழில் வீடு புகுந்து நகைகளை திருடிய இருவர் கைது!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ் நெல்லியடியில் உள்ள வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றைப் பட்டப்பகலில் உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டப்பட்டன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரனைகளை தொடர்ந்த காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும்20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து I போன் ஒன்றும் ஐ பாட் ஒன்றும், 06 கிராம் எடையுடைய தோடுகளும் மற்றும் 35 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *