நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அரசியல் நிலைமைகள் தொடர்பில் அரசியல் மட்டத்தில் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த சில தொழிற்சங்கபிரதிநிதிகள் சிலர் விஜயம் மேற்கொண்டனர்
இந் நிலையில் தொழிற்சங்கபிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நாட்டில் இடம்பெற்றுவரும் சமகால நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
தொழிற்சங்கபிரதிநிதிகள் குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



