ஜனாதிபதியின் செயலாளர் மீது தொலைபேசி திருட்டு குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டார தொலைபேசி திருட்டு மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலி முகத்திடலில் போராட்டக்காரர்களின் ஊடகப் பேச்சாளரின் கையடக்கத் தொலைபேசியை கைப்பற்றியதன் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார இருப்பதாக குற்றஞ்சாட்டிய அதேவேளை, இவ்வாறான துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்துமாறு நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை நிறுத்தி, நிலையான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் பாடுபட வேண்டும் என போராட்டக்காரர்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை எதிர்ப்பாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது இது முதல் தாக்குதல் அல்ல” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 28 2022 சனிக்கிழமையன்று உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது காலி முகத்திடலில் போராட்டக்காரர்களின் ஊடகப் பேச்சாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது.

இந்த தொலைபேசியை ஜனாதிபதி ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைப்பற்றியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“இது எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கலாம்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

“நாங்கள் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னோக்கி சென்றோம் ஆனால் ஸ்டேஷனில் இருந்த அதிகாரிகள் முதலில் புகாரை பதிவு செய்ய தயங்கினார்கள்.

இருப்பினும், எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்களால் மிகவும் சமாதானப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் அதை பதிவு செய்ய ஒப்புக்கொண்டனர், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை அரசியலமைப்பின்படி மற்றும் நியாயமான முறையில் நடத்தியுள்ளனர்” என்று சர்வ பக்ஷிக அரகல கருவோ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *