முட்டையின் விலை மீண்டும் எகிறியது!

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தொடர் விலையேற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் அஜித் குணசேகர,

முட்டை ஒன்றின் விலை எதிர்காலத்தில் 50 ரூபாவாகவும் 1kg கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாகவும் உயர்வடையலாம் என தெரிவித்தார்.

இவ்வாறாக நாளுக்கு நாள் கட்டுப்பாட்டு விலையின்றி வர்த்தகர்கள் தாம் விரும்புகின்ற விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *