யாழில் கசிப்பு பதுக்கி வைத்திருந்த இளைஞன் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் 35 லிட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம்(29) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கசிப்பினை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரிடமான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *