வட மாகாணத்தில் இந்து பௌத்த கலாசார பேரவையால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறியான சிங்கள மொழியை 2021 – 2022 வரை கல்வி கற்று 600 மணித்தியாலங்கள் ( HNDS) பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை யூன் மாதம் 4 , 5 ஆகிய திகதிகளில் வடக்கு மாகாணம் முழுவதும் அதற்குரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் வெளிவாரியாக சிங்கள மொழியை கற்ற மாணவர்களும் இந்த பரீட்சையில் பங்குபற்றி அரச அங்கீகாரமுடைய HNDS சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்து பௌத்த கலாசார பேரவையால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிக்கான வகுப்புக்கள் அரச பாடசாலைகளில் 120 மணித்தியாலங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக கற்பிக்கப்படும்.
இதில் தற்போது கா.பொ.த பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதையும் வடக்கு மாகாணத்திலுள்ள எங்களால் அனுமதி பெறப்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து இந்த இலவச மொழியியல் கற்கை நெறியில் கலந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு
வடக்கு மாகாண தலைமைக்காரியாலயம் யாழ்ப்பாணம்- 077- 2711181
021- 2232072