திருகோணமலை – சம்பூர் பகுதியில் உள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகள் இனந்தெரியாத விசமிகளால் இன்று திங்கட்கிழமை அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பம் தனிப்பட்ட குரோதத்தால் இடம்பெற்றதா? அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு சம்பூர் பொலிஸார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பிற செய்திகள்