
கொழும்பு.மே 30
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) முதல் 14 நாட்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது விடுமுறையை முடித்து மீண்டும் கடமைக்குத் திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.