எரிவாயுவுடனான கப்பல் இன்று கொழும்பை வந்தடைகின்றது!

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் இன்று கொழும்பினை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்று 7வது நாளாகவும் வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *