19இல் இருப்பதை கூட 21ஆம் திருத்தத்தில் அடைய முடியாது: சுமந்திரன்

கொழுமு்பு,மே 30

21 ஆம் திருத்தம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கின்ற ஒரு சட்டமூலம் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தாலும்கூட, உண்மையிலேயே 19ஆம் திருத்தத்தில் இருந்ததைக்கூட அதிலே அடைய முடியாத சூழ்நிலை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், 19ஆம் திருத்தத்தில், ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தற்போது நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21ஆம் திருத்த வரைவில், ஜனாதிபதி எத்தனை அமைச்சுகளையும் தம்கீழ் வைத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அதிலே 13ஆம் திருத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *