10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *