கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்;வடிவேல் சுரேஷ் வேண்டுகோள்!

அட்டலுகம சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

” பண்டாரகம, அட்டலுகம பகுதியில் மலரும் முன் காய்ந்து சருகாகி காற்றில் கலந்த சிறுமி ஆயிஷாவின் நிலைமைக்கு காரணமான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் சவூதியில் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள் நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆயிஷாவின் பேரிழப்பே இவ் அவலங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். ” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *