ஒட்டுசுட்டானில் வாகன விபத்து

ஒட்டுசுட்டான்,மே 30

ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிவீதியில் சிவநகர் கிராமத்தில் பால் ஏற்றிச்செல்லும் பட்டா வாகனமும் இராணுவ பிக்கப் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (30) மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பாலை ஏற்றிச் சென்ற பட்டா வாகானம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மொத்த பாலும் வீண்விரயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *