
கொழும்பு,மே 30
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேலும் ஐந்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
அவர் அமைச்சராக இருந்தபோது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு ரூ. 8,465,000க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

