ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அவர் அமைச்சராக இருந்தபோது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு 8,465,000/- ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *