ரிஷாட் மீண்டும் CID இற்கு அழைத்து செல்லப்பட்டார்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (24) மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *