கொழும்பு, மே 30
கோட்ட கோ கமவில் முன்னணியில் நின்று செயற்பாட்ட சமூக செயற்பாட்டாளர் ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் சட்டவிரோத ஒன்றுக் கூடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.