அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாணந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிஸ் குழுக்கள் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, சிறுமியை தாமே கொலை செய்ததாக குறித்த நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.