களுத்துறையில் தந்தை, மகள் சடலமாக மீட்பு

களுத்துறை – ஹினட்டியங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடை மகள் ஆகியோரின் சடலங்களே நேற்று இரவு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவரின் சடலங்களும் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *