இன்று முதல் எரிவாயு விநியோகம்

கொழும்பு, மே 31

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதனையடுத்தே 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமானதால் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *