குடும்பத்தகராறு காரணமாக மனைவியும், சகோதரனும் படுகொலை! கணவன் கைது

நவகத்தேகம – முல்லேகம பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவரும், 25 வயதுடைய பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த கொலைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேக நபர் காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *