
காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொரலஸ்கமுவ நகரசபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தின் போது பொலிஸார் மற்றும் நீதிமன்றத்துக்கு இடையூறுகளை ஏற்பட்டுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, இரண்டு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து ரணிந்து சுரம்ய சேனாரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.