பசிலை வெளியேற்றாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும்! உதயகம்மன்பில

21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றி, நாட்டையும் நாடாளுமன்றத்தையும் பசிலிடமிருந்து காப்பாற்றுவோமென நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், மருந்து தட்டுப்பாடுகளாலும் பட்டினியாலும் மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பார்த்து நான் எப்போதும் அச்சப்பட்டதில்லை.

அவ்வாறு பயம் இருந்திருந்தால், நிதி அமைச்சராக அவர் செயற்பட்ட அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவருக்கு எதிராக போராடியிருக்க மாட்டேன்.

நாடாளுமன்ற அதிகாரம் பசிலிடம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்‌சவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றி நாடாளுமன்றத்தையும் நாட்டையும் காப்பாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை எமக்கில்லை.

ஆனாலும் நாடு குழியில் விழுந்துள்ளது. எனவே இப்போது கட்சி அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டைக் குழியிலிருந்து மீட்க வேண்டும்.

‘கோட்டா கோ கம’, ‘ரணில் கோ கம’ என்பற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் விரைவாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தல் ஒன்று நடந்தால் யார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *