தெமட்டகொடையில் உணவகம் நடத்தி வந்த பெண் படுகொலை!

தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த பெண், கடந்த 29ஆம் திகதி இரவு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *