4 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்குள்ளான ஆயிரத்து 220 பேர் இன்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 94 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நோயாளர்கள் 957 பேர் இன்று குணமடைந்தனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்று (23) அறிவிக்கப்பட்டன.

26 ஆண்களும் 17 பெண்களும் இதில் அடங்குகின்றனர்.

இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

30 வயதிற்கு குறைந்த 5 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததுடன், 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 139 பேர் குறித்த காலப்பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 424 பேர் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *